ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் படுகொலை கேரளாவில் படுகொலை.
கேரளாவில் பினராய் விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைப்பெற்று வருகிறது. அம்மாநிலத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு மோசமாகி கொண்டே செல்கிறது என்பதை பத்திரிக்கைகள் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும், எளிதில் நாம் அறிந்து கொள்ள முடியும். பா.ஜ.க-வை சேர்ந்த கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், மீது கொடூர தாக்குதல்கள் இன்று வரை நிகழ்ந்து வருகிறது என்பது நிதர்சனம்.
இந்நிலையில் தற்பொழுது துயர சம்பவம் ஒன்று அங்கு அரங்கேறியுள்ளது. பாலக்காடு அருகே தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் சஞ்சித் (வயது 27) அவர்களை இன்று காலை SDPI கட்சியை சேர்ந்த நபர்கள் படுகொலை செய்த சம்பவம் கேரளாவில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.