100 ஆண்டு கழித்து பாரத தேசம் திரும்பும் அண்ணபூரணி சிலை.
பிரதமர் மோடி அயல்நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பொழுது, ஆங்கிலேயர்கள் காலத்தில் மற்றும் கள்ளத்தனமாக இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பல்வேறு சிலைகளை தனது கடும் முயற்சியின் மூலம் பிரதமர் மீட்டு வருகிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
பாரத தேசத்தில் இருந்து எடுத்து சென்ற பல பொக்கிஷங்களை திரும்பவும் தாயகம் கொண்டு வருவதற்கான பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு உத்தர பிரதேசத்தில் இருந்து கனடா நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட அண்ணபூரணி சிலை மீண்டும் காசி மாநகருக்கு திரும்பி இருப்பது உ.பி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.