சென்னை உள்ளிட்ட 4 மாவட்டப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு !

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு !

Share it if you like it

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ நாளை முதல்‌ அரையாண்டுத்‌ தேர்வு நடத்தப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால்‌ பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ தவிர அனைத்து மாவட்டங்களிலும்‌ திட்டமிட்டபடி அரையாண்டுத்‌ தேர்வு நடைபெறும்‌.

இந்த 4 மாவட்டங்களில்‌ மட்டும்‌ நிலைமை சீரானவுடன்‌ அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம்‌ அளித்து தனித்தனியாக வினாத்தாள்‌ தயாரித்து அரையாண்டுத்‌ தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்‌ அறிவுறுத்தியதின்‌ அடிப்படையில்‌ இவ்வாறு தெரிவிக்கப்படுவதாக, பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி தெரிவித்துள்ளார்.


Share it if you like it