நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23 -ஆம் தேதி வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இந்த நிகழ்வை தென்னாப்பிரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக பார்த்து விஞ்ஞானிகளைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி சந்திரயான்-3 வெற்றி உலக மக்களுக்கே கிடைத்த வெற்றி என பெருமிதம் தெரிவித்தார். இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு இன்று (சனிக்கிழமை)
வந்த பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞானிகளின் நேரில் சந்தித்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்.