உலக செஸ் சாம்பியன் பட்ட போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா நேற்று முன் தினம் (புதன் கிழமை) தாயகம் திரும்பினார். தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை அழைத்து பாராட்டியதுடன் அரசு சார்பில் ரூ. 30 லட்சம் வழங்கினார். இந்த நிலையில் பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைந்து பாராட்டு தெரிவித்தார்.