பி.டி.ஆர். ஆடியோ… ஸ்டாலின் மவுனம்… மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி: தட்டித் தூக்கும் அண்ணாமலை!

பி.டி.ஆர். ஆடியோ… ஸ்டாலின் மவுனம்… மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி: தட்டித் தூக்கும் அண்ணாமலை!

Share it if you like it

உதயநிதியும், சபரீசனும் முறைகேடாக 30,000 கோடி ரூபாய் சம்பாதித்திருப்பதாக, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ குறித்து, தி.மு.க. அரசு இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்காமல் மவுனமாக இருப்பது, வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உதயநிதியும், சபரீசனும் ஒரே வருடத்தில் 30,000 கோடி ரூபாய் வரை முறைகேடாக சம்பாதித்திருப்பதாக தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தோம். இது இம்மாதம் 14-ம் தேதி வெளியிட்ட ‘தி.மு.க. ஃபைல்ஸ்’ என்கிற வீடியோவுக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. இதற்கு, தி.மு.க. அரசு இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்காமல் மவுனமாக இருக்கிறது. இது அக்கட்சிக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும்.

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் ஒரு ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலைப்படைத் தாக்குதல் என்பதை முதல் நாளிலிலிருந்து தமிழக பா.ஜ.க. கூறி வருகிறது. இதை தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிகை நேற்று மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தி இருக்கிறது. ஆனால், இதை இன்று வரை சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் என்று மக்களை ஏமாற்றி வருகிறது தி.மு.க. அரசு. தி.மு.க.வினரின் ஆட்சி அதிகார மமதையால் நாள்தோறும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒருபுறம் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மறுபுறம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் குடும்பம், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரே வருடத்தில் 30,000 கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்திருப்பது.

இந்த ஆட்சி கொடுத்த வாக்குறுதிகளுக்கு நேர் எதிராகவும் மக்கள் விரோதமாகவும் செயல்பட்டு வருவதை இனியும் அனுமதிக்க முடியாது. ஊழலில் கொழிக்கும் தனது குடும்பத்தாரின் இந்த செயலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று மக்களுக்கு பதில் அளிப்பதோடு தகுந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it