நீ கட்டுன மூட்டைய அவுக்கும்போது உன் பித்தலாட்டம் தெரியவருது சாமி… ஸ்டாலினை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

நீ கட்டுன மூட்டைய அவுக்கும்போது உன் பித்தலாட்டம் தெரியவருது சாமி… ஸ்டாலினை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Share it if you like it

தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஸ்டாலினை ‘புஷ்பா’ திரைப்படப் பாடல்கள் மூலம் வச்சு செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்!

2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தி.மு.க.வினர் வாக்குறுதிகளை அள்ளிவிட்டனர். குறிப்பாக, ஸ்டாலின் தனது பிரச்சாரத்தின்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றார். கனிமொழியோ, தி.மு.க.வினர் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும் என்று கூறினார். மேலும், தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகளை வாரி வழங்கி இருந்தார்கள்.

ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் நெருங்கி விட்ட நிலையில், கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய், சிலிண்டருக்கு 100 ரூபாய் வழங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் தமிழக மக்கள், குறிப்பாக பெண்கள் தி.மு.க. ஆட்சி மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான், ‘புஷ்பா’ திரைப்படத்தின் பாடல் வரிகளை உல்டா செய்து ஸ்டாலினை வச்சு செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். அதாவது, சமீபத்தில் ரிலீசான ‘புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் வரிகளை ‘பொய் சொல்றியா மாமா பொய்யா சொல்றியா மாமா… ஆயிரம் ரூபாய் தர்றேன்னு வருமுன்பு சொன்னாங்க… அப்புறமாவே தான் தர்றேன்னு இப்ப வந்து சொல்றாங்க… பொய் சொல்றியா மாமா பொய்யா சொல்றியா மாமா…’ என்று வரிகளை உல்டா செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

அதேபோல, ‘ஏ சாமி’ என்ற பாடல் வரிகளை ‘அய்யா சாமி… உன் கட்டக்குரலை கேட்கும்போது நல்லாத் தெரியுது சாமி… நீ சட்ட பட்டனை அவிழ்த்து விட்டது ஞாபகம் வருது சாமி… நீ கட்டுன மூட்டையை அவுக்கும்போது உன் பித்தலாட்டம் தெரியவருது சாமி… ஏ சாமி… அய்யா சாமி…’ என்றும் ரீமிக்ஸ் செய்து வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த இரு பாடல்களும் தமிழக மக்கள் மத்தியில் தாறுமாறாக ஹிட்டாகி விட்டது. எங்கு பார்த்தாலும் மேற்கண்ட இரு பாடல்களும்தான் ஒலிக்கின்றன. இதை வைரலாக்கி வெளுத்து வாங்கி வருகிறார்கள் நெட்டிசன்களும், தமிழக மக்களும். இதுதான் தி.மு.க.வினரை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.


Share it if you like it