மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்க மாட்டேன் – பிரதமர் மோடி உறுதி !

மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்க மாட்டேன் – பிரதமர் மோடி உறுதி !

Share it if you like it

தெலங்கானா மாநிலம் ஜஹீராபாத் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,

தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை, காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களுக்கு வழங்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

தான் உயிருடன் இருக்கும் வரை மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்க மாட்டேன் என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கியதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

தெலங்கானாவில் 26 சமூகங்களைச் சேர்ந்தவர்கள் நீண்டகாலமாக இதர பிற்படுத்தப்பட்டோருக்கான அனுமதி கோரி வரும் நிலையில், அதனை ஏற்காத காங்கிரஸ் அரசு இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஒரே இரவில் இதர பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து வழங்கியதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *