தனி நாடா கேக்குற… கஸ்பரை பஞ்சர் செய்த ராதா ரவி!

தனி நாடா கேக்குற… கஸ்பரை பஞ்சர் செய்த ராதா ரவி!

Share it if you like it

தனிநாடு கேட்குமாறு அப்பாவி மக்களை தூண்டி விட்ட ஜெகத் கஸ்பரை பா.ஜ.க மூத்த தலைவர் எம்.ஆர்.ராதா தும்சம் செய்து பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினத்தை ஒவ்வொரு இந்தியர்களும் இன்று வரை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். ஆனால், தேசத்திற்கு எதிராக பிரிவினையை வளர்க்கும் தீய சக்திகளும் இதே நாட்டில் தான் இருந்து வருகின்றன என்பது கசப்பான உண்மை. அந்தவகையில், தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரும் கிறிஸ்தவ மதபோதகருமாக இருப்பவர் ஜெகத் கஸ்பர் ராஜ். இவர், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வழிபாட்டு முறைகளை இழிவுப்படுத்தும் வகையில் பேசக் கூடியவர். குறிப்பாக, இவரது கருத்துக்கள் இந்திய தேசத்திற்கு எதிராக இன்று வரை இருந்து வருகிறது.

அந்தவகையில், பட்டியல் சமூகத்தினரும், இஸ்லாமிய சமூகத்தினரும் 40 சதவிகிதம் பேர் இந்தியாவில் வசிக்கிறீர்கள். ஆகவே, 40 சதவிகித நிலப்பரப்பைக் கேளுங்கள் என்று அண்மையில் இவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்பாவி இளைஞர்களை தேசத்திற்கு எதிராக திருப்பும் இவரை போன்றவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் என்.ஐ.ஏ.விடம் புகார் தெரிவித்து இருந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில் தான், தி.மு.க அரசை கண்டித்து தமிழக பா.ஜ.க.வினர் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணணாமலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அந்தவகையில், இப்போராட்டத்தில் கலந்து கொண்ட பிரபல நடிகரும் பா.ஜ.க மூத்த தலைவருமான ராதா ரவி தி.மு.க.வையும், தனிநாடு குறித்து பேசிய கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் கஸ்பரையும் மிக கடுமையாக சாடி இருக்கிறார். மேலும் விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

Image

Share it if you like it