நடன இயக்குனராக இருந்து கதாநாயகனான உயர்ந்த ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ தேவைக்களுக்கு உதவி வருகிறார். இந்த நிலையில் இனி தான் மக்களிடம் நேரில் சென்று உதவிட உள்ளதாக இதற்கு மக்களின் ஆதரவு தேவை என்றும் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். முன்னதாக, சமூகப் பணிக்காக இனி யாரும் தனதுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று கூறியிருந்த ராகவா லாரன்ஸ், நடன இயக்குனராக இருந்த போது சமூகப் பணியாற்ற பண தேவைப்பட்டதால் மற்றவர்களின் உதவியை பெற்று வந்ததாகவும் தற்போது நடிப்பின் மூலம் பணம் கிடைப்பதால் யாரும் பண அனுப்ப தேவையில்லை என்றும் தெவித்திருந்தார்.