காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு சென்றனர். இதையடுத்து, இருவரும் வெளியில் வந்தனர். அப்போது, ராகுல் காந்தி தனது மூக்கை நோண்டுவது போலவும், தனது விரலை கட்சியின் தலைவர் முதுகில் வைப்பது போலவும் அந்த காணொளி அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து, இருவரும் காரில் ஏறி செல்கின்றனர். இதுதான், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.