காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13 வரை ஜாமினை சூரத் நீதிமன்றம் நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, மோடி சமுதாயம் குறித்து அவதூறாகப் பேசிய ராகுல் காந்திக்கு, குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனால், எம்.பி. பதவியை இழந்த ராகுல், அரசு பங்களாவையும் காலி செய்யும் சூழல் ஏற்பட்டது. வழக்கில் மேல் முறையீடு செய்வதற்கு அவருக்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
அந்த வகையில், சூரத் பகுதிக்கு இன்று சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.