ஹிந்துக்களை இனப்படுகொலை செய்வேன்: வைரலாகும் அர்ஷத் வீடியோ… அதிரடி கைது!

ஹிந்துக்களை இனப்படுகொலை செய்வேன்: வைரலாகும் அர்ஷத் வீடியோ… அதிரடி கைது!

Share it if you like it

ராஜஸ்தானில் ஹிந்துக்களை இனப்படுகொலை செய்வேன் என்று அர்ஷன் கான் என்பவன்அறைகூவல் விடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, அவனை போலீஸார் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோடா பகுதியைச் சேர்ந்தவன் அர்ஷத் கான். இஸ்லாமியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவன். குறிப்பாக, ஏராளமான இஸ்லாமிய இளைஞர்கள் இவனது ரசிகர்கள். இவனுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 14,000 ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். காரணம், இவன் ஹிந்துக்களுக்கு எதிராக தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தொடர்ந்து கருத்து பதிவிட்டு வருவதுதான். முகமது நபி பற்றி பேசிய பா.ஜ.க. முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த டெய்லர் கன்ஹையா லால், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மருந்தாளுனர் உமேஷ் கோஹ்லே ஆகியோர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவன் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், ஹிந்துக்களை இனப்படுகொலை செய்வேன் என்று அர்ஷத் கான் தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு வந்திருக்கிறான். இந்த வீடியோக்கள் இஸ்லாமிய குழுக்களுக்குள் மட்டுமே சுற்றி வந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதையடுத்து, அஸ்வினி ஸ்ரீவத்ஸவா என்பவர், அர்ஷத் கான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோடா போலீஸில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து அர்ஷத் கானை கைது செய்தனர். அர்ஷத் கான் மீது எற்கெனவே மதப் பிரிவினை தூண்டுதல், நாட்டுக்கு எதிராக சதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே, அர்ஷத் கான் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் கொல்கத்தாவைச் சேர்ந்த இஸ்கான் அமைப்பின் துணைத் தலைவர் ராதாராமன் தாஸ், “ஹிந்துக்கள் அதிகமாக வசிக்கும் இந்தியாவில், ஹிந்து கோயில்களுக்கும், ஹிந்துக்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலைதான் நிலவி வருகிறது. சிறுபான்மையினர் என்கிற பெயரில் இந்தியாவில் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கும் இஸ்லாமியர்கள், ஹிந்து விரோதப் போக்கையே கடைப்பிடித்து வருகிறார்கள். ஆனால், ஹிந்துக்களோ கையறு நிலையில் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் தங்களது நேரம் வரும்போது என்ன செய்யப் போகிறார்கள் என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார்கள். அப்போது ஹிந்துக்களே நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதேபோல, கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த, தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பேரணியில், ஒரு இஸ்லாமிய சிறுவன், ஹிந்துக்களே வாய்க்கரிசியுடன் தயாராக இருங்கள். கிறிஸ்தவர்களே பூக்கள், மெழுகுவர்த்திகளுடன் தயாராக இருங்கள். உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம் என்று அறைகூவல் விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், காஷ்மீர் மாநிலத்தில் ஹிந்து பண்டிட்களுக்கு நிகழ்ந்த கொடூரம், பிற மாநிலங்களில் வசிக்கும் ஹிந்துக்களும் நேரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்தி வருகின்றன. ஆகவே, ஹிந்துக்கள் தற்போதே விழித்துக் கொள்வது நல்லது என்று ஹிந்து அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.


Share it if you like it