அஜித்தை தொடர்ந்து ரஜினி, சூர்யா, பார்த்திபன்: வம்புக்கு இழுக்கும் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்!

அஜித்தை தொடர்ந்து ரஜினி, சூர்யா, பார்த்திபன்: வம்புக்கு இழுக்கும் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்!

Share it if you like it

அஜித்தைத் தொடர்ந்து தற்போது ரஜினி, சூர்யா, பார்த்திபன் ஆகியோரையும் வம்புக்கு இழுத்திருக்கிறார் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.

தமிழ்த் திரைப்பட உலகில் சினிமா விமர்சகராக அறியப்படுபவர் மாறன். இவர், பெரும்பாலும் ப்ளூ கலரில் சட்டை அணிந்திருப்பதால் ப்ளூ சட்டை மாறன் என்று அழைக்கப்படுகிறார். தமிழ்த் திரையுலகில் ஒரு படம் ரிலீஸாகிறது என்றால், அப்படம் குறித்து எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்துக்காக அனைவரும் காத்திருப்பார்கள். அந்தளவுக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களை தயக்கமின்றி வழங்கக் கூடியவர்.

கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸான அஜித்தின் வலிமை படம் குறித்து எதிர்மறை விமர்சனங்களை அளித்திருந்தார். இதனால், அஜித் ரசிகர்கள் மூலம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர்களால் தாக்கப்பட்டார் என்று கூட செய்திகள் வெளியாகின. அதேசமயம், விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு நேர்மறையான விமர்சனங்களை அளித்திருந்தார். ஆனால், வலிமை படம்தான் அதிக வசூலை வாரிக்குவித்தது. பீஸ்ட் படம் விஜய் ரசிகர்களாலேயே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.

இந்த நிலையில்தான், நடிகரும் இயக்குனருமான புதியபாதை பார்த்திபன் எழுதி, இயக்கி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் இரவின் நிழல் திரைப்படம் கடந்த 15-ம் தேதி ரிலீஸானது. இப்படத்தை பலரும் பாராட்டி இருந்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக, முதன் முதலில் எடுக்கப்பட்ட ‘நான்லீனியர் சிங்கிள் ஷாட்’ படம் என்று பார்த்திபன் அறிவித்தற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த ப்ளூ சட்டை மாறன், இதற்கு முன்பு நான்லீனியர் சிங்கிள் ஷாட் படம் வெளியாகி இருப்பதாகக் கூறியிருந்தார்.

இதற்கு பார்த்திபன் மறுப்புத் தெரிவித்திருந்த பார்த்திபன், படம் குறித்து நேர்மறையான விமர்சனம் கொடுப்பதற்கு ஒரு இயக்குனரிடம் ப்ளூ சட்டை மாறன் 3 லட்சம் ரூபாய் கேட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில், கடந்த வாரம் ப்ளூ சட்டை மாறனின் உருவ பொம்மையை சிலர் செருப்பால் அடித்து, தீவைத்து கொளுத்தினர். இதற்கு பார்த்திபன்தான் காரணம் என்று ப்ளூ சட்டை மாறன் குற்றம்சாட்டி இருந்தார். எனினும், இதை மறுத்த பார்த்திபன், இதற்காக மாறன் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்பதாகக் கூறியிருந்தார். ஆனால், தன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டாம், நான்லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்று சொல்லி மக்களை ஏமாற்றியதற்காக, மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

இப்படி இருவருக்குமான மோதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, ரஜினி, சூர்யாவையும் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்து எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் மாறன். அதாவது, ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, தன்னிடம் எவ்வளவு பணம் இருந்தாலும், நிம்மதி இல்லை என்று கூறியிருந்தார். அதற்கு, உங்க சொத்தை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்துவிட்டு இமயமலையில் போய் நிம்மதியைத் தேடலாமே என்று ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருந்தார். இதனால், ஆத்திரமடைந்த ரஜினி ரசிகர்கள், மாறனை கடுமையாக விமர்சித்தனர்.

இதனிடையே, சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடத்திருக்கும் தி லெஜெண்ட் சினிமாவுக்கு நேர்மறையான விமர்சனம் அளித்திருந்தார் ப்ளூ சட்டை மாறன். எனவே, 3 லட்சம் வாங்கிக் கொண்டு விமர்சனம் எழுதுபவர்தானே என்றும் நக்கல் செய்திருந்தனர் ரஜினி ரசிகர்கள். உடனே, லெஜெண்ட் சரவணனுடன் ரஜினி இருக்கும் போட்டோவை போட்டு, இதுக்கு என்னாங்கடா அர்த்தம் தர்பார் குஞ்சுகளே என்று கேட்டிருந்தார். இந்த நிலையில்தான், சூரரைப் போற்று படத்துக்காக நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினருக்கு 5 தேசிய விருதுகள் வழங்கப்பட்டது.

இதற்கு பிஸ்மி என்பவர், சூர்யாவின் மேஜேனர் தங்கதுரை, தேசிய விருது கமிட்டியில் இருப்பதால்தான் 5 விருதுகள் கிடைத்திருக்கிறது என்று கொளுத்திப் போட்டார். உடனே, இந்த ட்விட்டை எடுத்துப் போட்டு உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் சூர்யா என்று நடிகர் சூர்யாவை வம்புக்கு இழுத்திருக்கிறார். இதையடுத்து, ப்ளூ சட்டை மாறனை, சூர்யா ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.


Share it if you like it