சூப்பர் ஸ்டார் திடீர் வேண்டுகோள்!

சூப்பர் ஸ்டார் திடீர் வேண்டுகோள்!

Share it if you like it

தமிழ் திரை உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாட்டு மக்களிடம் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் காணொளி ஒன்றினையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை கொண்ட ஒரே தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த். ஜாக்கி ஜானிற்கு, அடுத்து ஆசியாவின் இரண்டாவது சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினி. இவர், பாரத தேசத்தின் மீதும் பாரதப் பிரதமர் மோடி மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். அந்த வகையில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்றி இவ்விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து இருந்தது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனைவரும் தங்களது இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி நமது தியாகிகளை நினைவு கூற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it