அரசு மருத்துவமனையில் சரக்கும் அடிக்கலாம்!

அரசு மருத்துவமனையில் சரக்கும் அடிக்கலாம்!

Share it if you like it

அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தவர், வார்டிலேயே கூல்டிரிங்கஸ் பாட்டிலில் மதுவை கலந்து குடித்த வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் பலவும் எந்த லட்சணத்தில் செயல்பட்டு வருகின்றன என்பதை நாம் அறிவோம். சாதாரண கால் வலிக்காக சென்ற பெண் விளையாட்டு வீராங்கனையின் காலையே அகற்றியதோடு, பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையின் கை அழுகும் அளவுக்கு ‘தரமான’ சிகிச்சைகளை அளித்து வருகிறார்கள். மேலும், அரசு மருத்துவமனைக்குள் சென்றாலே ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு ஒருவித துர்நாற்றம் வீசும். அதேபோல, வார்டுக்குள் சென்றால் மருந்துகளின் நெடி பயங்கரமாக இருக்கும்.

இந்த நிலையில்தான், அரசு மருத்துவமனைக்குள் மதுவும் குடிக்கலாம் என்பது அம்பலமாகி இருக்கிறது. ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார் அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர். இந்த சூழலில், அந்த நபர் கூல்டிரிங்ஸ் பாட்டிலில் மதுவை கலந்து குடித்திருக்கிறார். இந்த காட்சியை அதே வார்டில் இருந்த மற்றொருவர் தனது செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.

இந்த வீடியோவை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த நிலையில், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதைக் கண்ட பலரும் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.


Share it if you like it