உண்மைச் சம்பவம் என்பது உள்ளதை உள்ளபடி சொல்வது பெயர்களையும் அடையாளங்களையும் மாற்றுவது அல்ல – ரங்கராஜ் பாண்டே..!

உண்மைச் சம்பவம் என்பது உள்ளதை உள்ளபடி சொல்வது பெயர்களையும் அடையாளங்களையும் மாற்றுவது அல்ல – ரங்கராஜ் பாண்டே..!

Share it if you like it

பிரபல நடிகர் சூர்யா தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதும், மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை மேற்கொள்வதையுமே இன்று வரை வாடிக்கையாக கொண்டு உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு, நீட் தேர்விற்கு எதிர்ப்பு, ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு மசோதாவிற்கு எதிர்ப்பு, திரை அரங்கு உரிமையாளர்களுடன் மோதல் போக்கு என நடிகர் சூர்யாவின் செயல் மக்கள் மத்தியில் தற்பொழுது பேசு பொருளாக மாறி உள்ளது என்பது நிதர்சனம்.

சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சூரரைப் போற்று. இதில் பல உண்மை சம்பவங்களை மறைத்து கதைகளை தங்களுக்கு ஏற்ப திரித்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டதாக அந்நாட்களில் பலர் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தனர்.

அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்து அண்மையில் வெளியாகிய திரைப்படம் ’ஜெய் பீம்’. தவறு செய்த உண்மையான நபர்களை மக்களுக்கு அடையாளம் காட்டாமல் பல சம்பவங்களை மறைத்து. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இத்திரைப்படத்தில் இடம் பெற்று உள்ளதாக நெட்டிசன்கள் உட்பட பலர் தங்கள் கோவத்தை மீண்டும் சூர்யாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே-வின் டுவிட்டர் பதிவு பெரும் வரவேற்பையும், கடும் விமர்சனத்தையும், பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it