‘மதமாற்றம்’ வெள்ளையர்களை களம் இறக்கிய கிறிஸ்தவ மிஷனரிகள்!

‘மதமாற்றம்’ வெள்ளையர்களை களம் இறக்கிய கிறிஸ்தவ மிஷனரிகள்!

Share it if you like it

ஹிந்துக்களை மதமாற்றம் செய்யும் விதமாக கிறிஸ்தவ மிஷநரிகள் வெளிநாட்டில் இருந்து ஆட்களை அழைத்து இந்திய ரயில்களில் பிரச்சாரம் செய்யும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதமாற்றம் என்பது தேசிய அபாயம் என மிகப்பெரிய மேதை ஒருவர் கூறி இருந்தார். ஒரு, நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறை அனைத்தையும் சீர் குழைக்கும் முயற்சியாக மதமாற்றம் இருந்து வருகிறது. மதமாற்றத்தை பிரிவினை சக்திகள், தேச விரோத சக்திகள் தங்களது ஆயுதமாக பயன்படுத்தி கொள்கின்றனர். மேலும், அந்நிய நாடுகளின் எலும்பு துண்டிற்கு, ஆசைப்பட்டு வாழும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதே மதமாற்றம் என சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு மதமாற்றம் என்பது மிகப்பெரிய நோயாக சமூகத்தில் மாறி வருகிறது.

இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் அதிக அளவில் மதமாற்றம் நடைபெற்று வருகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. மோகன் சி லாசரஸ், எஸ்றா. சற்குணம் போன்ற கிறிஸ்தவ மிஷநரிகள் வெளிப்படையாகவே ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, ஹிந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாறுங்கள் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கிறிஸ்தவ மிஷநரிகள் செய்யும் அட்டூழியங்கள், அடாவடிகள் குறித்து பேச வேண்டிய தி.மு.க. வழக்கம் போல கப்சிப். வாக்கு வங்கி அரசியலுக்காக, இதையெல்லாம் கண்டும் காணாமல் கடந்து செல்வதை விடியல் அரசு தனது கொள்கையாக கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட கொடுமைகள் தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தான், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் மதமாற்றம் செய்யும் விதமாக, ரயிலில் மத பிரச்சாரம் செய்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Share it if you like it