நிருபரை மீண்டும் ஒருமையில் திட்டிய அமைச்சர்: மெளனம் காக்கும் செந்தில்!

நிருபரை மீண்டும் ஒருமையில் திட்டிய அமைச்சர்: மெளனம் காக்கும் செந்தில்!

Share it if you like it

பத்திரிக்கையாளர்களை ஒருமையில் திட்டிய தி.மு.க அமைச்சர் மெளனம் காக்கும் நெறியாளர் செந்தில்.

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்பதற்கு ஏற்ப தி.மு.க அமைச்சர்களின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. அந்தவகையில், பதநீர் இவ்வளவு இனிப்பாக இருக்கிறதே இதில் சர்க்கரை போட்டு இருக்கா என்று தேர்தல் சமயத்தில் முன்பு ஒருமுறை தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேட்டு இருந்தார். அவரையே, ஓவர்டேக் செய்யும் விதமாக, தி.மு.க வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், பனைமரத்தில் இருந்து இளநீர் பறித்து குடித்தவன் நான் என்று சட்டமன்ற கூட்ட தொடரில் உளறி கொட்டி இருந்தார்.

இப்படியாக, அமைச்சர் பன்னீர் செல்வத்தின் பேச்சு இருந்து வருகிறது. இதுதவிர, உதயநிதி ஸ்டாலினை சட்டமன்றத்தில் வானளாவ புகழ்ந்து அவையின் நேரத்தை வீணடித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது இருந்து வருகிறது. அந்தவகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர் ஒருவரை பார்த்து கிறுக்கு தனமான கேள்வி கேக்காத என்று திட்டியிருந்தார்.

அந்தவகையில், உர தட்டுப்பாடு இருப்பதாகவும் பக்கத்து மாவட்டத்திற்கு சென்று வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கடலூர் விவசாயிகள் கூறிவருகிறார்களே இதுகுறித்து உங்கள் கருத்து என்னவென்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதற்கு அமைச்சர், நீ உரம் வாங்கிறியா எந்த விவசாயி சொல்றான் நீ சொல்லுயா என ஒருமையில் பேசி இருக்கிறார். அமைச்சரின், இந்த பேச்சை இதுவரை எந்த ஒரு பத்திரிக்கையாளர் சங்கங்களும் கண்டிக்கவில்லை என்பதே நிதர்சனம். குறிப்பாக, குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று பேசி வரும் நெறியாளர் செந்தில் வழக்கம் போல கப்சிப். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை என்றால் மட்டும் உடனே கேள்வி மேல் கேள்வி எழுப்பும் இவரா? நேர்மையான ஊடகவியலாளர் என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it