மகளிருக்கு 33 %இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள ராகுல் காந்தி பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இதுவே சரியான நேரம் என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் 2018-ஆண்டே வலியுறுத்தியதாகவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.