கிரிக்கெட்: ரிஷாப் பண்ட் புதிய சாதனை!

கிரிக்கெட்: ரிஷாப் பண்ட் புதிய சாதனை!

Share it if you like it

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்திருக்கிறார் இந்திய வீரர் ரிஷாப் பண்ட்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறது. முதலில், பிப்ரவரி மாதம் நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டது. இதில், 3 போட்டிகளிலும் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கியது. இதில், மொகாலியல் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இதையடுத்து, 2-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பெங்களூருவிலுள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி, 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து, 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது. இந்த இன்னிங்ஸில்தான் ரிஷாப் பண்ட் புதிய சாதனை படைத்திருக்கிறார். அதாவது, வெறும் 28 பந்துகளில் 50 ரன்கள் அடித்து, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிகவேக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்கிற புதிய சாதனையை படைத்திருக்கிறார் ரிஷாப் பண்ட்.


Share it if you like it

2 thoughts on “கிரிக்கெட்: ரிஷாப் பண்ட் புதிய சாதனை!

  1. தவறான கருத்து . இன்னும் இந்திய அணி பேட்டிங் முடிவில்லை

Comments are closed.