திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே இன்று அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் ஒரே கிரமத்தை சேர்ந்த 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 –மும் நிவாரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 -வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.