சாலையில் நட்டு வைத்திருந்த “Road Reflector” -ரை திருட முயன்ற நபரை கையும், களவுமாக, பிடித்த பொதுமக்கள்.
இரவில் விபத்து ஏற்படாத வண்ணம் ஓட்டுனர்களுக்கு, சரியான பாதையை காட்டும் “Road Reflector” கம்பத்தை தி.மு.க துண்டு அணிந்த நபர் ஒருவர் எடுத்து செல்ல முயன்ற பொழுது, அவ்வூரை சேர்ந்த மக்கள் ஏன்? இதனை எடுத்து செல்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய பொழுது. முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
மக்களின் கடும் எதிர்ப்பினை தொடர்ந்து தான் திருட முயன்ற ”Road Reflector” கம்பத்தை மீண்டும் அதே இடத்தில் நட்டு வைத்து உள்ளார். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மழை, வெயில், புயல், வெள்ளம், எது ஏற்பட்டாலும் கழக கண்மணிகள் தங்கள் பணியினை சிறப்பாக செய்வார்கள் என இணையதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.