வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை கொண்டுள்ள மத்திய அரசு 40 % ஏற்றுமதி வரி விதித்துள்ளது. 3- லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து கையிருப்பில் வைத்துள்ளது. மேலும் கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்திருப்பதாக அறிவித்துள்ள மத்திய அரசு, இந்த இருப்பிலிருந்து முக்கிய சந்தைகளுக்கு அனுப்பி வருகிறது. இந்த நிலையில் 10 நகரங்களில் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு கடைகள் மற்றும் வாகனங்கள் மூலம் மானிய விலையில் இன்று முதல் வெங்காயம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ 25 – க்கு மக்களுக்கு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.