டோன்ட் வொர்ரி சல்மான்… நாடு பாதுகாப்பானவர்கள் கைகளில்தான் இருக்கிறது: கங்கனா ரணாவத் பதிலடி!

டோன்ட் வொர்ரி சல்மான்… நாடு பாதுகாப்பானவர்கள் கைகளில்தான் இருக்கிறது: கங்கனா ரணாவத் பதிலடி!

Share it if you like it

நாடு பாதுகாப்பானவர்கள் கைகளில்தான் இருக்கிறது. ஆகவே, நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று நடிகர் சல்மான் கானுக்கு, நடிகை கங்கனா ரணாவத் பதிலடி கொடுத்திருக்கிறார்.

பாலிவுட் சினிமா உச்ச நட்சத்திரங்களில் சல்மான் கானும் ஒருவர். கடந்த மாதம் ராஜஸ்தானிலிருந்து மும்பை போலீஸாரின் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த மர்ம நபர் ஒருவர், தனது பெயர் ராக்கி பாய் எனவும், விரைவில் சல்மான் கானை கொல்லப் போவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டது. மும்பை காவல்துறை சார்பாக Y+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், சமீபத்தில் டி.வி. நிகழ்ச்சியொன்றில் பேசிய சல்மான் கான், “பாதுகாப்பற்று இருப்பதைவிட பாதுகாப்புடன் இருப்பதே மேல். எங்கு சென்றாலும் முழு பாதுகாப்புடன் செல்கிறேன். ஏராளமான துப்பாக்கிகள் என்னை வட்டமிடுகின்றன” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையும், பா.ஜ.க. ஆதரவு கொள்கையுடையவருமான கங்கனா ரணாவத், நாடு தற்போது பாதுகாப்பானவர்களின் கைகளில் இருப்பதாகக் கூறியிருக்கிறார். ஹரித்துவாரில் நேற்று நடந்த கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், சல்மான் கான் பாதுகாப்பு அச்சுறுத்தல் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது, “நாங்கள் நடிகர்கள். சல்மான் கானுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி இருக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடமிருந்து அவர் பாதுகாப்பு பெற்று வருகிறார். எனவே, பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதோடு, எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தபோது, எனக்கும் அரசாங்கத்தால் பாதுகாப்பு வழங்கப்பட்டது. நாடு இன்றைக்கு பாதுகாப்பானவர்களின் கைகளில் இருக்கிறது. நாம் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it