சனாதனத்தை ஒழிப்போம், என அமைச்சர் உதயநிதி பேசியதற்கு நாடெங்கிலும் கண்டன குரல் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக அவர் மீது தாமாக முன் வந்த நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. மேலும் இந்துகளின் உணர்வுகளை அமைச்சர் உதயநிதி புண்படுத்தியதால் உடனடியாக விசாரணை நடத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம் உரிய வழிமுறைகளை கடைப்பிடித்து வரும் திங்கட்கிழமை புதிதாக மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தியது.