‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் அழகான வெளிப்பாடுதான் சனாதன தர்மம் என்று ஆளுநர் ஆர். என். ரவி விளக்கமளித்துள்ளார். ‘உலகம் ஒரு குடும்பம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ஆகியவையே சனாதனத்தின் பிரதிபலிப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியிருந்த நிலையில் ஆளுநர் சனாதனம் குறித்து விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.