தி.மு.க.வை திட்டிய சவுக்கு சங்கர்: தேம்பி அழுத நெறியாளர்!

தி.மு.க.வை திட்டிய சவுக்கு சங்கர்: தேம்பி அழுத நெறியாளர்!

Share it if you like it

பெண் நெறியாளரை அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அழுத வைத்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில், உள்ள பெரும்பாலான அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் தி.மு.க.வின் ஆசி பெற்றவர்கள் என்று சொல்லப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, சீப்பு செந்தில், தம்பி தமிழரசன், குணம் ஆகாத குணா, கார்த்திகை செல்வன், கார்த்திகேயன் போன்றவர்கள் இருந்து வருகின்றனர் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, யூ டியூப் இணையதள ஊடகத்தை சேர்ந்த நெறியாளர்களும் தி.மு.க.வின் விசுவாசிகளாக இருந்து வருகின்றனர்.

இதனிடையே, பிரபல இணையதள ஊடகமான ’நியூஸ் சென்ஸ்’ அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரிடம் அண்மையில் நேர்காணல் நடத்தியது. பெண் நெறியாளர் மாலதி என்பவர் பல்வேறு கேள்விகளை அவரிடம் முன்வைத்தார். இதற்கு, பதில் அளித்து வந்த சங்கர் ஒரு கட்டத்தில் தி.மு.க.வை வழக்கம் போல விமர்சனம் செய்ய துவங்கினார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத, நெறியாளர் தி.மு.க.விற்கு ஆதரவாக பேசினார். இதயைடுத்து, இருவருக்கும் விவாதம் நீள்கிறது. சங்கரின், கேள்விக்கு பதில் அளிக்க முடியாத நெறியாளர் மாலதி ஒரு கட்டத்தில் மனம் உடைந்து கண் கலங்கி உள்ளார். இந்த காணொளிதான், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாலதி போன்ற நெறியாளர்கள், நிருபர்கள், பத்திரிகையாளர்கள் தி.மு.க.விற்கு தொடர்ந்து முட்டு கொடுத்து வரும் வரை அக்கட்சியை யாரும் எதுவும் செய்து விட முடியாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it