‘ஏறுனா ரயிலு…எறங்குனா ஜெயிலு… ஆசிரியரை மிரட்டிய மாணவன்!

‘ஏறுனா ரயிலு…எறங்குனா ஜெயிலு… ஆசிரியரை மிரட்டிய மாணவன்!

Share it if you like it

அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர் ஒருவர், தனது ஆசிரியரிடம் கீழ்த்தரமாக நடந்து கொண்ட காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

சமீப காலமாக பள்ளி மாணவர்கள் குறித்த செய்திகள் தற்பொழுது அதிகம் வர துவங்கியுள்ளது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த புதுச்சத்திரம் அரசுப் பள்ளியில், பயின்று வந்த மாணவர்கள் பார்வையற்ற ஆசிரியர், பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுதே அவர் முன்பு நடனம் ஆடி கேலி, கிண்டல் செய்த காணொளி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், தேனி மாவட்டம் தேவதானபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பயின்று வரும் மாணவர் ஒருவர் தனது ஆசிரியர்களிடம் கீழ்த்தரமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it