பி.எஃப்.ஐ. வெரி டேஞ்சர்: கவர்னர் அட்டாக்!

பி.எஃப்.ஐ. வெரி டேஞ்சர்: கவர்னர் அட்டாக்!

Share it if you like it

பி.எஃப்.ஐ. எனப்படும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா என்கிற அமைப்பு மிகவும் ஆபத்தானது. பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக இந்த அமைப்பு செயல்படுகிறது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார்.

எஸ்.டி.பி.ஐ. எனப்படும் சோஷியல் டெமாகரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா என்கிற அரசியல் கட்சியின் கிளை அமைப்பாக பி.எஃப்.ஐ. செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு லஷ்கர் இ தொய்பா, அல்கொய்தா, சிமி உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தவிர, நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் இயங்கி வரும் அமைப்பினர்தான் ஆங்காங்கே வன்முறை செயல்களை அரங்கேற்றுவதாகவும் புகார்கள் இருக்கின்றன. அதேபோல, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிக் கொடுப்பது, ஆட்கள் அனுப்புவது போன்ற செயல்களிலும் பி.எஃப்.ஐ. அமைப்பினர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ராஜஸ்தானில் கடந்த மாதம் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஹிந்துக்களின் சைக்கிள் பேரணியில் கல்வீசி தாக்குதல் நடத்தி, ஹிந்துக்களின் வீடுகளுக்கு தீவைத்ததும் பி.எஃப்.ஐ. அமைப்பினர்தான் என்பது அம்மாநில மக்களின் கருத்தாக இருக்கிறது. இதேபோல, மத்தியப் பிரதேசம், குஜராத், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்த ராமநவமி விழா, ஹனுமன் ஜெயந்தி போன்ற விழாக்களின்போது ஹிந்துக்கள் மீது கல்வீசியும், துப்பாக்கியால் சுட்டும், கத்தி போன்ற ஆயுதங்களாலும் தாக்குதல் நடத்தியதும் இந்த அமைப்பினர்தான் என்று உளவுத்துறை தெரிவிக்கிறது. ஆகவே, பி.எஃப்.ஐ. அமைப்பை நாடு முழுவதும் தடை செய்ய மத்திய பா.ஜ.க. அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இந்த நிலையில்தான், பி.எஃப்.ஐ. மிகவும் ஆபத்தான அமைப்பு என்றும், பயங்கரவாத அமைப்புகளுக்கு பின்புலமாக இந்த அமைப்பினர் இருந்து வருகின்றனர் என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடா மித்ரா எழுதிய ‘THE LURKING HYDRA’ என்கிற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் புத்தகத்தை வெளியிட்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் எழுதிய இந்த புத்தகம் சிறந்த ஆவணமாக இருக்கும். இந்திய ராணுவத்தின் சிறப்பு குறித்த புத்தகம் எதுவும் இதுவரை இல்லாமல் இருந்தது. அந்த குறையை இந்த புத்தகம் நிறைவு செய்யும்.

இந்தியாவில் சமூக அமைதியைக் குலைக்க சில அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். இந்த அமைப்பு மனித உரிமைகள் அமைப்புகள் போல செயல்பட்டுக் கொண்டு ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய நாடுகளுக்கு சண்டையிட ஆட்களை அனுப்பி வைக்கிறது. இந்தியாவில் சமூக அமைதியைக் குலைக்க சில அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கிட்டத்தட்ட 60 முகமூடிகளை அணிந்திருக்கிறது. வெவ்வேறு பெயர்களில் மனித உரிமை, அரசியல் மற்றும் மாணவர் இயக்கம் போல முகமூடி அணிந்து இந்தியாவில் இயங்கி வருகின்றனர். நாட்டை சீர்குலைப்பதே இந்த அமைப்பினரின் நோக்கம். பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா செயல்பட்டு வருகிறது. அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே. அரசியல் லாபத்துக்காக வன்முறையைத் தூண்டுவதை ஏற்க முடியாது. பயங்கரவாதத்தில் ஈடுபட்டால் அதற்கான பதிலடியை அவர்கள் பெறுவார்கள்” என்று அதிரடியாகப் பேசி இருக்கிறார்.


Share it if you like it