சீமான் ஒருத்தன் வருவான்னு ஹிட்லருக்கு முன்பே தெரியும்!

சீமான் ஒருத்தன் வருவான்னு ஹிட்லருக்கு முன்பே தெரியும்!

Share it if you like it

ஹிட்லர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் எனக்காக கூறியதுதான் என சீமான் பேசியிருக்கிறார். அதாவது, சீமான் என ஒருவன் வருவான் என்பதை ஹிட்லர் முன்பே கணித்து இருக்கிறார் என்ற ரீதியில் அவரது பேச்சு அமைந்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர், அளந்து விடும் கட்டுகதைகளையும், பொய்களையும் கேட்க ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அப்பாவி, தம்பி மற்றும் தங்கைகள் சீமானின் பேச்சில் மயங்கி அக்கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அதேவேளையில், சீமானின் உண்மையான சுயரூபம் அறிந்த பழைய தம்பிகள் அக்கட்சியில் இருந்து ஓட்டம் எடுத்து வருகின்றனர். கெட்டிகாரன் புளுகுக்கு உருவம் கொடுத்தால் அது சீமானாக தான் இருக்கும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, ஹிட்லர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் எனக்காக தான் கூறியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். ஹிட்லர் மறைந்த ஆண்டு எப்போ?, சீமான் பிறந்த ஆண்டு எப்போ? அவர் எந்த நாடு, இவர் எந்த நாடு. அப்படியிருக்க, ஹிட்லர் தனக்காக தான் கூறியிருக்கிறார் என்றால் இதனை எப்படி? ஏற்றுக்கொள்ள முடியும் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.


Share it if you like it