நடிகை வியலட்சுமி, சீமான் மீது அளித்த புகாரை வாபஸ் பெற்றுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். விஜயலட்சுமி கடந்த 2011-ஆம் ஆண்டு அளித்த புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் விஜயலட்சுமி, புகாரை வாபஸ் பெற்ற பிறகும் வழக்கை நிலுவையில் வைத்துள்ளது குறித்து விளக்கம் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.