எங்கள் காதுகள் பாவமில்லையா?: இரக்கமில்லாத சீமானை கொஞ்சும் நெட்டிசன்கள்!

எங்கள் காதுகள் பாவமில்லையா?: இரக்கமில்லாத சீமானை கொஞ்சும் நெட்டிசன்கள்!

Share it if you like it

நான் சுடுக்காட்டில் எரியும் விளக்கில்தான் நான் படித்தேன் என சீமான் பேசிய காணொளி பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், அடுத்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் புகழை திருடி அதில் வெளிச்சம் தேட நினைக்கும் எளிய தமிழ் பிள்ளை என்பதை அனைவரும் நன்கு அறிவர். ஆமை கறி, பூனை கறி, பி.கே. 47, அரிசி கப்பல், தேள், பாம்பு, பன்றி, பூரான் என இவர் அளந்து விடும் கதைகளுக்கு ஒரு முடிவே இல்லை என்பது நிதர்சனம். இவரது, உண்மையான சுயரூபத்தை அறிந்த தம்பிகள் அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். அதேவேளையில், அப்பாவி புதிய தம்பிகள் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். இப்படியாக, ’உள்ளே வெளியே’ என அக்கட்சியின் நிலைமை இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான், சீமான் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், அவர் கூறியதாவது ; சின்னபிள்ளையில் எல்லாரும் பேய் என்றால் பயப்படுவார்கள். ஆனால், நான் சுடுகாட்டில்தான் படுத்திருப்பேன். அங்கு, எரியும் விளக்கில்தான் நான் படிப்பேன் என கூறியுள்ளார்.


Share it if you like it