அப்பாவிகளை அடிப்பதுதான்   வீரமா?

அப்பாவிகளை அடிப்பதுதான் வீரமா?

Share it if you like it

ரயிலில் பயணம் செய்த வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை குடிபோதையில் இருந்த தமிழன் அடித்த காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், இந்தியா எனது நாடு அல்ல என்று பேச கூடியவர். இவரது, பிரிவினை பேச்சிற்கு பல அப்பாவி தம்பிகள் மற்றும் தங்கைகள் பலியாகி வருகின்றனர். சீமானின், பிரிவினை பேச்சு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும், கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் குறித்து தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்களை சீமான் மேற்கொண்டு வருகிறார். இதனால், தமிழகத்தில் பணியாற்றி வரும் அப்பாவி வடமாநில தொழிலாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

சீமானின் பிரிவினை விஷம் ஏறிய தம்பிகள் வடமாநில தொழிலாளர்களிடம் தொடர்ந்து மோதல் போக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதுகுறித்தான, காணொளிகளை இன்றும் சமூகவலைத்தளங்களில் காண முடியும். இப்படிப்பட்ட சூழலில், ரயிலில் பயணம் மேற்கொண்ட வடமாநில தொழிலாளர்களை தமிழர் ஒருவர் ஆபாசமாக திட்டியும், அடித்துள்ளார். அவரது பேச்சின் மூலம் அவர் குடித்துள்ளார் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த, காணொளிதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தை தாண்டி பல்வேறு மாநிலங்களில் தமிழர்கள் வாழ்த்து வருகின்றனர். இதுபோன்றவர்களின், அருவருக்கதக்க செயல் அங்குள்ள தமிழர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

ஆமை கறி, பூனை கறி, குஸ்கா கதை சொல்லி ஊரை ஏமாற்றி வயிற்று பிழைப்பை நடத்தி வரும் சீமான் போன்றவர்களின் பேச்சின் விளைவே இதுபோன்ற காணொளிகள் வர காரணம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it