அயல்நாடுகளில் இருந்து அடிக்கடி போன் வரும் அள்ளி விட்ட சீமான்!

அயல்நாடுகளில் இருந்து அடிக்கடி போன் வரும் அள்ளி விட்ட சீமான்!

Share it if you like it

இரவு முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து எனக்கு போன் செய்து தம்பிகள் தொல்லை செய்வதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனையுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியில் இருக்கும் சொச்சம், மிச்சம் தம்பிகள் மற்றும் தங்கைகள் மாற்று கட்சிகளுக்கு ஓடிவிடக் கூடாது என்பதற்காக இன்று ஒரு தகவல் போல தினம் ஏதேனும் ஒரு கதையை அள்ளி விட கூடியவர் சீமான். பிறவியிலேயே காது கேட்காதவர்கள் கூட தம் பேச்சை ரசித்து கேட்பதாக முன்பு ஒருமுறை கூறியிருந்தார். நான், இலங்கை சென்று பாடி விட்டு வரட்டுமா? தம்பி என்று எஸ்.பி.பி. தன்னிடம் அனுமதி கேட்டார் என தெரிவித்து இருந்தார். அதாவது, எஸ்.பி.பி. மறைந்த பின்புதான் இந்த செய்தியினை நாட்டு மக்களுக்கு கூறியிருந்தார். இப்படியாக, சீமானின் நாட்கள் நகர்ந்து வருகின்றன

இவர், அவிழ்த்து விடும் கதைகளை உண்மையென நம்பி அவரை பின்பற்றும் தம்பிகளும் தங்கைகளும் இன்று வரை இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், பிரபல இணையதள ஊடகமான பிஹைன்ட் உட்ஸ் சீமான் மற்றும் அவரது மனைவியை அண்மையில் பேட்டி கண்டது. அப்போது, சீமான் கூறியதாவது ; அமெரிக்காவில் பிரச்சனை, ஐப்பானில் பிரச்சனை, ஆஸ்திரேலியாவில் பிரச்சனை, என்று சொல்லி இரவு முழுவதும் என்னை தூங்க விடுவதில்லை. எல்லா நாட்டிலும் கட்சி இருக்கிறது அல்லவா. அதன்பிறகு, நான் அவர்களுக்கு ஆலோசனை கூறுவேன் என்று சிரிக்காமல் பேசியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it