சீமானை கழுவி ஊற்றிய சவுக்கு சங்கர்!

சீமானை கழுவி ஊற்றிய சவுக்கு சங்கர்!

Share it if you like it

வட மாநில தொழிலாளர்களை இழிவுப்படுத்தி வரும் சீமானை பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வட மாநிலத்தை சேர்ந்தவர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகிறார். இவரின், அருவருக்கதக்க பேச்சு பொதுமக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. வறுமையின் காரணமாக வட மாநிலத்தை சேர்ந்த ஏழைகள் தமிழகத்தை நோக்கி வருகின்றனர். அவர்களின் திறமைக்கு ஏற்ப கிடைக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். எனினும், இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் சீமான் போன்ற பிரிவினைவாதிகள் தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழகம் நன்கு அறிந்த பிரபல அரசியல் விமர்சகராக இருப்பவர் சவுக்கு சங்கர். இவர், Behindwoods ஊடகம் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த வகையில், வடமாநில தொழிலாளர்கள் குறித்த கேள்வியை மாணவர் ஒருவர் முன்வைத்தார். இதில், அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்தும் சீமானின் கருத்தில் இருந்து தாம் முரண்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it