அது ஆயா சுட்ட வடை… இது சீமான் சுட்ட வடை!

அது ஆயா சுட்ட வடை… இது சீமான் சுட்ட வடை!

Share it if you like it

சீமான் சொன்ன காஸ்ட்லி காக்கா கதை நெட்டிசன்கள் மத்தியில் கேலி, கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒவ்வொரு மேடையிலும், ஒவ்வொரு பேட்டியிலும் ஏதாவது ஒரு கதை சொல்லிக் கொண்டே இருப்பார். குறிப்பாக, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பற்றிய கதைகள் அதிகம் இடம்பெறும். அந்த வகையில், இலங்கையில் பிரபாகரனோடு ஆமைக்கறி சாப்பிட்டது முதல் முதன்முதலில் ஏகே74 துப்பாக்கி சுட்டது வரை அடங்கும். சமீபத்தில் கூட, ஓடிக்கொண்டே துப்பாக்கி சுட்டதும், பின்னர் பிரபாகரன் பதுங்குக் குழிக்குள் அழைத்துச் சென்றதாக ஒரு கதையைக் கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான், புதிதாக காக்கா கதை ஒன்றைச் சொல்லி இருக்கிறார் சீமான். அதாவது, இவரது வீட்டு மாடியில் புறா, காக்கை உள்ளிட்ட பறவைகளுக்கு தினமும் உணவு வைக்கப்படுமாம். அந்த வகையில், காக்கைகளுக்கு அவித்த முட்டையும், மீனும் வைக்கப்படுமாம். காரணம், இவரது வீட்டுக்கு வரும் காக்கைகள் சோறு சாப்பிடாதாம். அப்படியே சாப்பிட்டாலும், நெய் சோறுதான் சாப்பிடுமாம். இதனால், தினமும் 15 முட்டைகளையும் மீன்களையும் அவித்து மதில் சுவரில் வைப்பார்களாம்…

இன்னும் என்னவெல்லாம் சொன்னார் சீமான்… இதோ அந்த வீடியோ….


Share it if you like it