சீமான் கூறிய கொசுக் கதை… தம்பிகள் லகலக!

சீமான் கூறிய கொசுக் கதை… தம்பிகள் லகலக!

Share it if you like it

சொச்சம், மிச்சம் இருக்கும் தம்பி, தங்கைகள் கட்சியை விட்டு ஓடிவிடக் கூடாது என்பதற்காக புதுப் புதுக் கதைகளை கூறி மூளைச்சலவை செய்து வரும் சீமான், புதிதாக கொசுக் கதை கூறியிருப்பது மக்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளந்து விடும் கதைகள் தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். பிறவியிலேயே காது கேட்காதவர்கள் கூட என் பேச்சை கேட்பதாக மேடையில் முழங்கியது, தம்பி நான் போயி இலங்கையில் பாடி விட்டு வரட்டுமா என்று எஸ்.பி.பி. அனுமதி கேட்டது, தன்னை கடித்த விஷத்தேள் இறந்தது என சீமான் அள்ளி விடும் கதைகள் ஏராளம்.

ஆனால், கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்பதற்கேற்ப இவர் கூறும் பொய்க் கதைகளை அறிவார்ந்த தமிழக மக்கள் உடனுக்குடன் கண்டுபிடித்து விடுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. அந்த வகையில், பலம் படைத்த காட்டெருமை ஒன்றை கொசுக் கூட்டம் வீழ்த்தியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய புதிய கதைதான் தற்பொழுது மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே, பொய் சொல்லியே வாழும் இந்த கொய்யாத் தோப்பு கோணிப் புளுகனை கைது செய்து மனநல காப்பகத்தில் சேர்த்து அவர் கட்சியில் உள்ள தம்பி, தங்கைகளை காப்பாற்ற வேண்டும் என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it