அல்லேலூயா அல்லேலூயா… சிப ரிப ரீட்டா – சேகர்பாபு ஜெபம்!

அல்லேலூயா அல்லேலூயா… சிப ரிப ரீட்டா – சேகர்பாபு ஜெபம்!

Share it if you like it

கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவில் அல்லேலூயா சொல்லுங்க அல்லேலூயா சொல்லுங்க என அறநிலையத்துறை அமைச்சர் பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

எதிர்வருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை துறைமுகம் தொகுதியில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் 2,000 குடும்பங்களுக்கு புத்தாடைகள், மளிகைப் பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்றை தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இதையடுத்து, கிறிஸ்தவ மக்களுக்கு பரிசு தொகுப்பினை அவர் வழங்கினார்.

இதனை தொடர்ந்து, உதயநிதி பேசும் போது, நானும் கிறிஸ்தவன்தான். நான் படித்தது டோன் போஸ்கோ பள்ளியில். கல்லூரி படித்தது லயோலா கல்லூரியில். நான் காதலித்து திருமணம் செய்தது ஒரு கிறிஸ்தவ பெண்ணை. இதை சொல்லிக் கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன். இதைக் கேட்டால் சங்கிகளுக்கு வயிறு எரியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கிடையில், ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசும் போது, தனது கையை உயர்த்தி எல்லோரும் சொல்லுங்க அல்லேலூயா அல்லேலூயா என்று கூவிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it