பா.ஜ.க கூட்டணிக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்த காங்., மூத்த தலைவர்..!

பா.ஜ.க கூட்டணிக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்த காங்., மூத்த தலைவர்..!

Share it if you like it

ஹிந்துக்களின் உணர்வுகளையும், வழிபாட்டு முறைகளையும், தொடர்ந்து புண்படுத்தும் கட்சிகள் அதிகம் உள்ள மாநிலம் எதுவென்றால் அனைவரும் சுட்டி காட்டும் மாநிலமாக இன்று வரை தமிழகம் இருந்து வருகிறது என்பது மிகவும் வேதனைக்குறிய விடயம் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.

திமுக, விசிக, திக, கம்யூனிஸ்ட், கிறிஸ்தவ மிஷநரிகள், ஓட்டு அரசியல்வாதிகள், காசு ஊடகங்கள், பொய்யை நிரப்பி எழுதும் பத்திரிக்கைகள், அனைவரும் குறி வைக்கும் மதம் என்றால் அது ஹிந்து மதம் என்பதாக மட்டுமே இருக்க முடியும்.

கோடானு கோடி ஹிந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்திய கருப்பர் கூட்டத்தை இன்று வரை. தி.மு.க தலைவரோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளோ கண்டிக்காமல் மெளனம் காப்பதன் மூலம் அவர்களின் உண்மையான சுயரூபத்தை மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள முடியும் என்பது நிதர்சனம்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அமெரிக்க நாராயணன் அவர்கள் என் மதத்தையும் சேர்த்து, என் கடவுளையும் சேர்த்து, இழிவுப்படுத்தாக நபர்களுக்கே  நமது ஓட்டு இருக்க வேண்டும் என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருப்பதன் மூலம். தி.மு.க மற்றும் காங்கிரஸ், கூட்டணிக்கு ஓட்டு போட கூடாது. பா.ஜ.க கூட்டணிக்கே அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்று., நாராயணன் மறைமுகமாக மக்களிடம் கேட்டு கொண்டதற்கு நெட்டிசன்கள் வாழ்த்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it