சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் சொந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜுன் மாதம் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட அவர் மூன்று மாதத்திற்கும் மேலாக சிறையில் உள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமின் கேட்டு தாக்கல் செய்த ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் மேல் முறையீடு செய்ய அமைச்சர் உயர்நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.