அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க தனக்கு அதிகாரம் இல்லை எனவும் இதை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்றும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.
எனவே செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய அவரது வழக்கறிஞர்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு விரைந்துள்ளனர்.மனு இன்றே தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.