மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: மதுரை மருத்துவ கல்லூரி துணை பேராசிரியர் தாஹீர் உசேன் சஸ்பெண்ட்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: மதுரை மருத்துவ கல்லூரி துணை பேராசிரியர் தாஹீர் உசேன் சஸ்பெண்ட்!

Share it if you like it

23 மாணவிகள் அளித்த  பாலியல் புகாரின் அடிப்படையில், மதுரை மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் துணை பேராசிரியர் தாஹீர் உசேனை மருத்துவக் கல்லூரி இயக்குனரகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

மதுரை மருத்துவக் கல்லூரி மயக்கயவியல் துறையின் துணை பேராசிரியராக இருந்தவர் தாஹீர் உசேன். இவர், மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறையில் பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, விசாகா கமிட்டி அமைக்கப்பட்ட நிலையில், இக்கமிட்டியிடம் 23 மாணவிகள் எழுத்துப் பூர்வமான கடிதத்தை அளித்தனர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், துணை பேராசிரியர் தாஹீர் உசேன் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது. இதன் தொடர்ச்சியாக, தாஹீர் உசேனை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குநகரகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் கல்லூரியின் டீன் ரத்தினவேலு, “துணை பேராசிரியர் தாஹீர் உசைன் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக கடந்த 6-ம் தேதி மயக்கவியல் துறையில் பயிலும் மாணவிகளிடமிருந்து புகார் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, 8-ம் தேதி எழுத்துப்பூர்வமான புகார் பெறப்பட்டு, எனது மேற்பார்வையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் தனலட்சுமி தலைமையிலான 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில், 18 மாணவிகள், ஒரு செவிலியர், 2 பேராசிரியர்களிடம் எழுத்து வழியாக புகார் பெறப்பட்டது.

விசாரணையில், துணை பேராசிரியர் தாஹீர் உசேன் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதன் அறிக்கை மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனடிப்படையில் தாஹீர் உசேன் பணியிட நீக்கம் செய்யப்பட்டார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் ரீதியான புகார் பெறப்படுவது இதுதான் முதல்முறை. மேலும், இது போன்ற புகார்கள் மீது உடனடியாக மருத்துவக் கல்லூரி நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.


Share it if you like it