பணம் கையாடல்: தட்டிக்கேட்ட கோயில் பூசாரிகள்… ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய தி.மு.க. நிர்வாகி!

பணம் கையாடல்: தட்டிக்கேட்ட கோயில் பூசாரிகள்… ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய தி.மு.க. நிர்வாகி!

Share it if you like it

சென்னை அருகே கோயில் பூசாரிகளை தி.மு.க. நிர்வாகி ஒருவர், தகாத வார்த்தைகளால் வசைபாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 45-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. தி.மு.க. வட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இவர், வியாசர்பாடி பகுதியிலுள்ள பீலிகான் முனீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்துவது வழக்கம். அந்த வகையில், கடந்தாண்டு திருவிழா நடத்தியதில், மாரிமுத்து பணத்தை கையாடல் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கோயில் பூசாரிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அப்போதைக்கு சமாதானம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், நிகழாண்டு திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மாரிமுத்து செய்து வருகிறார். இன்னும் சில தினங்களில் திருவிழா நடைபெறவிருக்கும் நிலையில், பணம் விவகாரம் குறித்து கோயில் பூசாரிகளுடன் மாரிமுத்து விவாதித்திருக்கிறார். அப்போது, கடந்தாண்டு நடந்த திருவிழாவின்போது நடந்த பணம் கையாடல் குறித்து தி.மு.க. நிர்வாகி மாரிமுத்துவிடம், கோயில் பூசாரிகள் கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, கோயில் பூசாரிகளை தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டி இருக்கிறார்.

இதை பூசாரிகளில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டார். இந்த வீடியோதான் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், தி.மு.க. அரசுக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருவதோடு, பூசாரிகளை தகாத வார்த்தைகளால் வசைபாடிய தி.மு.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கோயில் பூசாரிகள் சங்கமும் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.


Share it if you like it