ஜனவரி 3 -ந் தேதி வரை கெடு – ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கொடுத்த மு.க. அழகிரி…!

ஜனவரி 3 -ந் தேதி வரை கெடு – ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கொடுத்த மு.க. அழகிரி…!

Share it if you like it

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூட்டணி குறித்து என்று நக்கல் செய்தாரோ அன்றிலிருந்து இன்று வரை தி.மு.க.வில் உச்சக்கட்ட குழப்பம் இன்று வரை நிலவி வருகிறது என்பது நிதர்சனம்.. திருமாவளவன், வைகோ, அபு பக்கர், உட்பட பலரும் தனி சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம்.. உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம் என்று அதிரடியாக கருத்து தெரிவித்து  திமுகவிற்கு ஷாக் கொடுத்தனர்..

பிரஷாந்த் கிஷோர் கொடுக்கும் நெருக்கடியால் தி.மு.க.வில் இருந்து பல மூத்த தலைவர்கள் விலகும் சூழ்நிலை உருவாகுவது ஒருபுறம் இருந்தால்… உதயநிதி மூத்த நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை வழங்காமல் அவமதிப்பு செய்வது இன்று வரை தொடர் கதையாக இருந்து வருகிறது..

முன்னாள் மத்திய அமைச்சர் திரு. மு.க. அழகிரியை தனது அறிவு திறமையால் கட்சியில் இருந்தே ஒரம் கட்டி விட்டார் ஸ்டாலின் என்று பல அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து இருந்த நிலையில்…

மு.க. அழகிரி தனது தாயாரை இன்று கோபாலபுரத்தில் சந்திக்கும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்…

  • தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை
  • ஆதரவாளர்கள் வலியுறுத்தினால் தனிக்கட்சி துவங்குவது நிச்சயம்
  • சட்டப் பேரவை தேர்தல் நிலைப்பாடு குறித்து ஜனவரி 3-ந் தேதி ஆலோசனை நடத்தப்படும்..
  • தி.மு.க வில் மறுபடியும் சேரும்படி எனக்கு அழைப்பு எதுவும் வரவில்லை..
  • நடிகர் ரஜினியை விரைவில் சந்தித்து பேசுவேன்

 


Share it if you like it