அதிக தொகுதிகளை கேட்டு ஸ்டாலினை மிரட்டுகிறாரா திருமா? உச்சகட்ட குழப்பத்தில் கூட்டணி..!

அதிக தொகுதிகளை கேட்டு ஸ்டாலினை மிரட்டுகிறாரா திருமா? உச்சகட்ட குழப்பத்தில் கூட்டணி..!

Share it if you like it

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூட்டணி கட்சிகளை குறித்து என்று கருத்து தெரிவித்தாரோ.. அன்றிலிருந்து இன்று வரை திமுகவில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது என்பது நிதர்சனம்..

வைகோ, அபுபக்கர், உட்பட பலரும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.. உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம் என்று அதிரடியாக கருத்து தெரிவித்தது.. காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது..

  • கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த சில தீய சக்திகள் இறங்கியுள்ளதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் அண்மையில் அலறியது..
  • அழகிரி தனிக்கட்சி தொடங்க போவதாக மிரட்டல்…
  • வர உள்ள 2 ஜி வழக்கின் தீர்ப்பு…
  •  பி.கே- மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ஆதிக்கம் என்று தி.மு.க தற்பொழுது தள்ளாடி வருகிறது..

இந்நிலையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார்…

”தேர்தலில் ஜெயிக்கலாம்; தோற்கலாம்’ தேர்தலில் தோற்றாலும், மூலையில் முடங்கி விட மாட்டோம்; சமூக நீதியைக் காக்க தேர்தல் அரசியலில் இருந்து விலகவும் தயார்..

அதிக தொகுதிகளை கேட்டு ஸ்டாலினை மிரட்டவும்.. தி.மு.க-விடம் அதிக நெருக்கம் காட்டும் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமாரை மறைமுகமாக  கண்டிக்கவும்… திருமாவளவன் போடும் நாடகம் இது என்று அரசியல் நோக்கர்கள் முதல் நெட்டிசன்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர்…

Image


Share it if you like it