ஐன்ஸ்டீனை வியக்க வைத்த கணித மேதை S.S.பிள்ளை

ஐன்ஸ்டீனை வியக்க வைத்த கணித மேதை S.S.பிள்ளை

Share it if you like it

எண் கணித பிதாமகன் எஸ்.எஸ்.பிள்ளை

ஒரு காலத்தில் செழுங்கோட்டையாக விளங்கிய நகரம் செங்கோட்டை. கேரளத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலையின் சாரலில் உதிர்ந்து விழுந்த ஒரு நிலாத்துண்டு. தென்னையும், புன்னையும், வாழையும் மயங்கிக் கிடக்கும் வளமார்ந்த பூமி.

இந்த செங்கோட்டை மண் தான், சுதந்திர இந்தியாவுக்கு வீர வாஞ்சிநாதனையும்,  இசைக்கு ஒரு கிட்டப்பாவையும், கணிதத்திற்கு ஒரு எஸ். எஸ். பிள்ளையையும், இவ்வுலகிற்கு தந்தது.

கிட்டப்பாவின் புகழ், தமிழ்நாட்டோடு நின்றது. வீர வாஞ்சியின் புகழ், இந்திய அளவில் படர்ந்தது. டாக்டர் எஸ்.எஸ்.பிள்ளையின் புகழோ, உலகளவில் விரிந்து பரந்தது.

தமது 35வது வயதிலேயே, ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சினை மேற்கொண்டு, அதில் வெற்றி பெற்று, நம் நாட்டை கணித மேதை இராமானுஜத்திற்கு பின், உலகிற்கே அடையாளம் காட்டியவர், டாக்டர் சிவ சங்கர நாராயண பிள்ளை என அழைக்கப் பெற்ற டாக்டர் எஸ்.எஸ். பிள்ளை அவர்கள்.

1901 ஏப்ரல் மாதம் 5ம் தேதியன்று, தோன்றினார். தொடக்கக் கல்வி இலத்தூரில் கழிந்தது தந்தை இறந்ததால், அவரது எதிர்காலம் கேள்விக் குறியானது. அப்போது சாஸ்திரியார் என்னும் ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர், இவரை தொடர்ந்து படிக்கத் தூண்டி, தம் சொற்ப வருமானத்திலிருந்து ஒரு தொகையை, எஸ்.எஸ். பிள்ளை கல்விக்காக செலவழித்து வந்தார்.

அந்த ஆசிரியரின் கனவு வீண் போகவில்லை. தொடர்ந்து செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து, இறுதியாண்டில் தேர்வில் வெற்றி பெற்றார். நாகர்கோவிலில், ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் இன்டர் மீடியட் முடித்த பின், திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில், பி.ஏ. வகுப்பி்ல் சேர்ந்தார்.

அதன் பின் பிள்ளையவர்கள், சென்னை பல்கலைகழகத்தில் கணிதத் துறையில், ஆராய்ச்சி மாணவராக சேர விரும்பினார். அன்றைய சட்டப்படி, ஒருவர் ஆராய்ச்சி மாணவராக சேருவதற்கு, பி.ஏ. ஆனர்ஸில் முதல் வகுப்பில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இவரோ, பி.ஏ.வில் இரண்டாம் வகுப்பே பெற்றிருந்தார். எனவே பல்கலைக்கழக விதிகளின் படி, இவர் ஆராய்ச்சி மாணவராக சேர இயலாத சூழல். இந்த வேளையில் தான், எதிர்பாராத இடத்திலிருந்து இவருக்கு ஒர் உதவி கிடைத்தது.

அன்று பச்சையப்பன் கல்லூரியின் முதல்வராக இருந்தவர், சின்னதம்பிப் பிள்ளை. பிள்ளையவர்களின் திறமையை உணர்ந்த இவர், பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் பிள்ளையவர்களுக்காக வாதாடினார்.

நம் சென்னை பல்கலைக்கழகம் கணித மேதை ராமனுஜர் விஷயத்தில் அவமானப் பட்டது போதும். மீண்டும் அந்த தவறை செய்யாதீர்கள். சாதாரண மாணவர்களுக்கென உருவாகியுள்ள விதிமுறைகளை, மேதைகளின் மீது திணிக்காதீர்கள் என வாதிட்டார். அவர் கருத்தினை ஏற்ற பல்கலைகழக ஆட்சிக் குழு, எஸ்.எஸ்.பிள்ளைக்கென அவ்விதிகளை தளர்த்திய பின், உரிய அனுமதியை வழங்கியது. பின் சென்னை பல்கலைகழகத்தில், கணிதத் துறையில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்து,  4 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, எம்.எஸ்.சி. பட்டம் பெற்றார்.

எஸ்.எஸ்.பிள்ளை அவர்கள் முதன் முதலாக, தம் ஆராய்ச்சியினை பேராசிரியர் அனந்தராவ் என்பவரின் கீழ் தான் தொடங்கினார். பின் 1929ம் வருடம், அண்ணாமலை பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரியத் தொடங்கினார். இவ்வேளையில் தான், “எண் கணித ஆராய்ச்சியில்” (Number Theory) ஈடுபட்டு, டாக்டர் பட்டம் பெற்றார்.

இந்தியாவிலேயே முதன் முதலாக, கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பெருமையும், இவருக்கு உண்டு. இருப்பினும் உலக அளவில், இவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தது, “Theory of numbers” எனும், “எண் கணித ஆராய்ச்சி”. இந்த எண் கணித கோட்பாட்டை, 3ம் நூற்றாண்டில் வாழ்ந்த டயாப்பேன்டைன் (Dephantine) எனும் கணித மேதை தான், முதன் முதலில் ஆராயத் தொடங்கினார். பின் பல நூற்றாண்டுகளாக, இக்கோட்பாடு படிப்படியாக விளக்கம் பெற்று வந்தது.

கிபி 1640-ல், பார்மேட் (FERMAT) எனும் கணித மேதை, இக்கோட்பாடு சம்பந்தமாக ஒரு கணித புதிரை (Problem) உருவாக்கி, அதற்கு விடை காணாமலேயே, மறைந்தார். அதன்பின் (Lagrange) லாகிரேஞ்சு எனும் பிரெஞ்சு கணித மேதை, இது சம்பந்தமாக ஒரு நிரூபணத்தைக் கண்டார்.

அவருக்கு பின் கேம்பிரிட்ஜ் பேராசிரியர் வாரிங்ஸ் என்பவர் (Pro.Warings), அது சம்பந்தமாக ஒரு புதிரையும் வழங்கி, அதற்குரிய விடையையும் கண்டார். அவர் தொடங்கி வைத்தது தான், புகழ் பெற்ற Waring’s Problem. இப் புதிருக்கு விடை காண, 300 ஆண்டுகளாக இம்மேதைகளெல்லாம் தனித்தனியாகவும், கூட்டாகவும் ஆராய்ச்சி செய்தும் வெற்றி பெற முடியாமல் போயிற்று.

தம் 20வது வயதில் டாக்டர் பட்டம் பெற்று, கணிதத்தில் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதிய, ஹங்கேரி நாட்டுக் கணித மேதை டாக்டர் பால்எர்டாஸ் (Dr.paulErdos) என்பவரால் கூட, Waring’s Problem-திற்கு தீர்வு காண முடியாது போயிற்று.

தொடர்ந்து 1858ல், பேராசிரியர் லியோவில்லி (Liourville) இவ்வாராய்ச்சில் ஒரு படி முன்னேறினார். 1909-ல் ஜெர்மன் மேதை டாக்டர் வெய்ப்பிரிச் (Weifrich), இப்புதிரை விடுவிக்க ஒரு வழிமுறையை கண்டார். இதைத் தொடர்ந்து, ஜெர்மன் மேதை பேராசிரியர் லியாண்டர் (Leander) மேலும் ஒரு படி முன்னேறினார்.

இதன் பின் இங்கிலாந்து கணித மேதைகளாகிய பேராசிரியர் ஹார்டியும் (Hardy), பேராசிரியர் லிட்டில் வுட்டும் (Little wood) கூட்டாக சேர்ந்து, மேலும் சில உண்மைகளை கண்டு பிடித்தனர். அதன் பின் அமெரிக்க மேதை டாக்டர் டிக்சன் (Dickson), மேலும் முன்னேறினார். தொடர்ந்து 1933ல் பேராசிரியர் ஜெம்ஸ் (james), மேலும் ஒரு படி கடந்தார்.

1935ல் ரஷ்ய மேதை பேராசிரியர் வினோகிரடோவ் (Vinogradov), புதிய நிரூபணமொன்று வழங்கினார். இவ்வாறு இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த கணித மேதைகள் எல்லோரும் சேர்ந்து, பல காலம் முயற்சித்தும் ஒருவராலும் முழுமையாக விடை காண முடியாமல், அனைவரையும் திணறடித்து வந்தது, இந்த Waring’s Problem.

இந்த வேளையில் தான், டாக்டர் எஸ்.எஸ்.பிள்ளை அவர்கள், யாருடைய உதவியுமின்றி, தன்னந்தனியாக உழைத்து, தன் ஆராய்ச்சியை தொடங்கிய  5வதுவருடத்தில், Waring’s Problemsத்திற்குரிய வழியையும், அதன் விடைகளையும் காண்பதில், பெரு முன்னேற்றம் அடைந்தார்.

10-02-1936-ல் உலக கணித மேதைகள் வியப்பால் மூச்சு விட மறந்து போய் நின்ற நாள். இந்திய நாடு கணித உலக அரங்கில் தலை நிமிர்ந்து நின்ற நாள். டாக்டர் சிவசங்கரநாராயண பிள்ளை Waring’sProblemத்திற்கு விடை கண்டு பிடித்து, தாம் சீனிவாச ராமனுஜத்தின் வாரிசு தான் என்பதை, உறுதி செய்த நாள்.

மேலும் அவர் தான் கண்டுபிடிப்பை உறுதி செய்து, ஒரு நூலையும் வெளியிட்டார். இதை தொடர்ந்து,, Dr.pilai’s Theory of Numbers எனும் ஒரு கோட்பாடு கணிதவியலில் நிரந்தரமான ஓரிடத்தை  பெற்றது.

இம்மாபெரும் சாதனையை முடித்தவுடனேயே, கடந்த 400 ஆண்டுகளாக கணித மேதைகளை மிரட்டிக் கொண்டிருந்த, ” Fourier Series” எனும் மற்றுமொரு கடினமான புதிரை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, உயர்மட்ட அளவில் அப்புதிரை விடுவித்த பெருமை இவருக்கு உண்டு.

இதை தொடர்ந்து உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியராகிய டாக்டர் ஐன்ஸ்டீனும் (Einstein,) டாக்டர் ஓபன்ஹைமரும் (Oppenheimer) தங்களுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட, அவருக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் இவரோ, இந்தியாவை விட்டு வெளியேங்கும் செல்ல விரும்பவில்லை. எனவே அவர்களழைத்த போதும் ‘India is enough for my research’ என பணிவுடன் கூறி, உலகையே வியக்க வைத்தார்.

ஆனால் காலத்தின் கட்டாயத்தால் பின்னாளில் சான் பிரான்சிகோவில் நடைபெறவிருந்த உலக கணித மாநாட்டிற்கு தலைமை ஏற்கவும், அதன் பின் பிரிஸ்டன் பல்கலைகழகத்தில் டாக்டர் ஐன்ஸ்டீனுடன் சேர்ந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் டாக்டர் பிள்ளை அவர்கள் 1950 வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவிற்கு புறப்பட்டார்.

புறப்படுவதற்கு முன்பு தன் நண்பர்களிடம் ஒரு நோட்டு புத்தகத்தை உயர்த்தி காட்டி, இதில் அடங்கியுள்ள ஆராய்ச்சியினை நான் பிரிஸ்டனில் சென்று வெளியிடுவேன். இதன் மூலம் இந்தியாவுக்கு பெரும் புகழ் கிடைக்கும் என்றார். கவனியுங்கள், இதன் மூலம் தனக்கு பெரும் புகழ் கிடைக்கும் என அவர் கூறவில்லை. இந்தியாவிற்கு கிடைக்கும் என்று தான் கூறினார். பணியுமாம் என்றும் பெருமை என வள்ளுவர் எழுதியதே இவருக்காக தானோ.

‘Star of mary land’ எனும் விமானத்தில் எதிர்காலம் பற்றிய பெருங் கனவோடு அவர் புறப்பட்டார். விதி சிரித்தது. கெய்ரோவில் விமானம் இறங்கியது. எரிபொருள் நிரப்பிய பின்னர், மீண்டும் புறப்பட்டது. ஆகஸ்ட் 31ம் தேதி அதிகாலை 3 மணி, விமானம் சகாரா பாலைவனத்தின் மீது பறந்து கொண்டிருந்த போது எதிர்பாரவிதமாக விபத்துகள்ளாகி, எரிந்து விழுந்து சாம்பலானது.

அந்த விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பு தான், டாக்டர் பிள்ளையவர்கள் ராமானுஜம் இன்ஸ்டிட்டியூலும், சில ஆய்வு சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருந்தார். டாக்டர் பிள்ளை புறப்படவிருந்த முதல் பயணத்தை, சில காரியங்களை முன்னிட்டு அவரே ரத்து செய்தார்.

இரண்டாவது பயணத்தை, விமான கம்பெனி ரத்து செய்தது. மூன்றாவதுபயணம் – அதன் முடிவு இவ்வாறாகியது. சான் பிரான்ஸ்கோ மாநாட்டில் பங்கு கொண்ட கணித மேதைகள், டாக்டர் பிள்ளைக்கு புகழாரம் சூட்டி அஞ்சலி செலுத்தினர். டாக்டர் பிள்ளையின் உருவ படத்தை திறந்து வைத்து திருப்திப் பட்டனர்.

இடிபெல் எனும் கணித மேதை, உலகிலுள்ள சிறந்த கணித மேதைகளை பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார். “Men and Mathematics” என்பது, அந்த நூலின் பெயர். இதில் இந்தியாவை பற்றி எழுதும் போது, சீனிவாச ராமானுஜம், டாக்டர் எஸ்எஸ் பிள்ளை என இவ்விருவரை பற்றி மட்டுமே எழுதியுள்ளார்.

10ம் வகுப்பு கணித நூலில் தேர்வுக்காக, அன்று என்னும் தலைப்பில் இந்தியா சந்தித்த மிகச் சிறந்த கணித மேதைகளின் பரம்பரையை பற்றி கூறுமிடத்தில் ஆரியபட்டர், பிரம்மகுப்தர், பாஸ்கர், சீனிவாச ராமானுஜம், டாக்டர் எஸ்.எஸ்.பிள்ளை என எழுதப் பட்டுள்ளது.

டாக்டர் எஸ்.எஸ்.பிள்ளை உலக புகழ் பெற்ற ஒரு கணித மேதை மட்டுமல்ல, மனித குலத்தை ஒட்டு மொத்தமாக நேசித்த மனித நேயம் மிக்க பண்பாளரும் கூட.

எண் கணித பிதாமகன் எஸ்.எஸ்.பிள்ளை

ஒரு காலத்தில் செழுங்கோட்டையாக விளங்கிய நகரம் செங்கோட்டை. கேரளத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலையின் சாரலில் உதிர்ந்து விழுந்த ஒரு நிலாத்துண்டு. தென்னையும், புன்னையும், வாழையும் மயங்கிக் கிடக்கும் வளமார்ந்த பூமி.

இந்த செங்கோட்டை மண் தான், சுதந்திர இந்தியாவுக்கு வீர வாஞ்சிநாதனையும்,  இசைக்கு ஒரு கிட்டப்பாவையும், கணிதத்திற்கு ஒரு எஸ். எஸ். பிள்ளையையும், இவ்வுலகிற்கு தந்தது.

கிட்டப்பாவின் புகழ், தமிழ்நாட்டோடு நின்றது. வீர வாஞ்சியின் புகழ், இந்திய அளவில் படர்ந்தது. டாக்டர் எஸ்.எஸ்.பிள்ளையின் புகழோ, உலகளவில் விரிந்து பரந்தது.

தமது 35வது வயதிலேயே, ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சினை மேற்கொண்டு, அதில் வெற்றி பெற்று, நம் நாட்டை கணித மேதை இராமானுஜத்திற்கு பின், உலகிற்கே அடையாளம் காட்டியவர், டாக்டர் சிவ சங்கர நாராயண பிள்ளை என அழைக்கப் பெற்ற டாக்டர் எஸ்.எஸ். பிள்ளை அவர்கள்.

1901 ஏப்ரல் மாதம் 5ம் தேதியன்று, தோன்றினார். தொடக்கக் கல்வி இலத்தூரில் கழிந்தது தந்தை இறந்ததால், அவரது எதிர்காலம் கேள்விக் குறியானது. அப்போது சாஸ்திரியார் என்னும் ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர், இவரை தொடர்ந்து படிக்கத் தூண்டி, தம் சொற்ப வருமானத்திலிருந்து ஒரு தொகையை, எஸ்.எஸ். பிள்ளை கல்விக்காக செலவழித்து வந்தார்.

அந்த ஆசிரியரின் கனவு வீண் போகவில்லை. தொடர்ந்து செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து, இறுதியாண்டில் தேர்வில் வெற்றி பெற்றார். நாகர்கோவிலில், ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் இன்டர் மீடியட் முடித்த பின், திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில், பி.ஏ. வகுப்பி்ல் சேர்ந்தார்.

அதன் பின் பிள்ளையவர்கள், சென்னை பல்கலைகழகத்தில் கணிதத் துறையில், ஆராய்ச்சி மாணவராக சேர விரும்பினார். அன்றைய சட்டப்படி, ஒருவர் ஆராய்ச்சி மாணவராக சேருவதற்கு, பி.ஏ. ஆனர்ஸில் முதல் வகுப்பில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இவரோ, பி.ஏ.வில் இரண்டாம் வகுப்பே பெற்றிருந்தார். எனவே பல்கலைக்கழக விதிகளின் படி, இவர் ஆராய்ச்சி மாணவராக சேர இயலாத சூழல். இந்த வேளையில் தான், எதிர்பாராத இடத்திலிருந்து இவருக்கு ஒர் உதவி கிடைத்தது.

அன்று பச்சையப்பன் கல்லூரியின் முதல்வராக இருந்தவர், சின்னதம்பிப் பிள்ளை. பிள்ளையவர்களின் திறமையை உணர்ந்த இவர், பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் பிள்ளையவர்களுக்காக வாதாடினார்.

நம் சென்னை பல்கலைக்கழகம் கணித மேதை ராமனுஜர் விஷயத்தில் அவமானப் பட்டது போதும். மீண்டும் அந்த தவறை செய்யாதீர்கள். சாதாரண மாணவர்களுக்கென உருவாகியுள்ள விதிமுறைகளை, மேதைகளின் மீது திணிக்காதீர்கள் என வாதிட்டார். அவர் கருத்தினை ஏற்ற பல்கலைகழக ஆட்சிக் குழு, எஸ்.எஸ்.பிள்ளைக்கென அவ்விதிகளை தளர்த்திய பின், உரிய அனுமதியை வழங்கியது. பின் சென்னை பல்கலைகழகத்தில், கணிதத் துறையில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்து,  4 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, எம்.எஸ்.சி. பட்டம் பெற்றார்.

எஸ்.எஸ்.பிள்ளை அவர்கள் முதன் முதலாக, தம் ஆராய்ச்சியினை பேராசிரியர் அனந்தராவ் என்பவரின் கீழ் தான் தொடங்கினார். பின் 1929ம் வருடம், அண்ணாமலை பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரியத் தொடங்கினார். இவ்வேளையில் தான், “எண் கணித ஆராய்ச்சியில்” (Number Theory) ஈடுபட்டு, டாக்டர் பட்டம் பெற்றார்.

இந்தியாவிலேயே முதன் முதலாக, கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பெருமையும், இவருக்கு உண்டு. இருப்பினும் உலக அளவில், இவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தது, “Theory of numbers” எனும், “எண் கணித ஆராய்ச்சி”. இந்த எண் கணித கோட்பாட்டை, 3ம் நூற்றாண்டில் வாழ்ந்த டயாப்பேன்டைன் (Dephantine) எனும் கணித மேதை தான், முதன் முதலில் ஆராயத் தொடங்கினார். பின் பல நூற்றாண்டுகளாக, இக்கோட்பாடு படிப்படியாக விளக்கம் பெற்று வந்தது.

கிபி 1640-ல், பார்மேட் (FERMAT) எனும் கணித மேதை, இக்கோட்பாடு சம்பந்தமாக ஒரு கணித புதிரை (Problem) உருவாக்கி, அதற்கு விடை காணாமலேயே, மறைந்தார். அதன்பின் (Lagrange) லாகிரேஞ்சு எனும் பிரெஞ்சு கணித மேதை, இது சம்பந்தமாக ஒரு நிரூபணத்தைக் கண்டார்.

அவருக்கு பின் கேம்பிரிட்ஜ் பேராசிரியர் வாரிங்ஸ் என்பவர் (Pro.Warings), அது சம்பந்தமாக ஒரு புதிரையும் வழங்கி, அதற்குரிய விடையையும் கண்டார். அவர் தொடங்கி வைத்தது தான், புகழ் பெற்ற Waring’s Problem. இப் புதிருக்கு விடை காண, 300 ஆண்டுகளாக இம்மேதைகளெல்லாம் தனித்தனியாகவும், கூட்டாகவும் ஆராய்ச்சி செய்தும் வெற்றி பெற முடியாமல் போயிற்று.

தம் 20வது வயதில் டாக்டர் பட்டம் பெற்று, கணிதத்தில் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதிய, ஹங்கேரி நாட்டுக் கணித மேதை டாக்டர் பால்எர்டாஸ் (Dr.paulErdos) என்பவரால் கூட, Waring’s Problem-திற்கு தீர்வு காண முடியாது போயிற்று.

தொடர்ந்து 1858ல், பேராசிரியர் லியோவில்லி (Liourville) இவ்வாராய்ச்சில் ஒரு படி முன்னேறினார். 1909-ல் ஜெர்மன் மேதை டாக்டர் வெய்ப்பிரிச் (Weifrich), இப்புதிரை விடுவிக்க ஒரு வழிமுறையை கண்டார். இதைத் தொடர்ந்து, ஜெர்மன் மேதை பேராசிரியர் லியாண்டர் (Leander) மேலும் ஒரு படி முன்னேறினார்.

இதன் பின் இங்கிலாந்து கணித மேதைகளாகிய பேராசிரியர் ஹார்டியும் (Hardy), பேராசிரியர் லிட்டில் வுட்டும் (Little wood) கூட்டாக சேர்ந்து, மேலும் சில உண்மைகளை கண்டு பிடித்தனர். அதன் பின் அமெரிக்க மேதை டாக்டர் டிக்சன் (Dickson), மேலும் முன்னேறினார். தொடர்ந்து 1933ல் பேராசிரியர் ஜெம்ஸ் (james), மேலும் ஒரு படி கடந்தார்.

1935ல் ரஷ்ய மேதை பேராசிரியர் வினோகிரடோவ் (Vinogradov), புதிய நிரூபணமொன்று வழங்கினார். இவ்வாறு இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த கணித மேதைகள் எல்லோரும் சேர்ந்து, பல காலம் முயற்சித்தும் ஒருவராலும் முழுமையாக விடை காண முடியாமல், அனைவரையும் திணறடித்து வந்தது, இந்த Waring’s Problem.

இந்த வேளையில் தான், டாக்டர் எஸ்.எஸ்.பிள்ளை அவர்கள், யாருடைய உதவியுமின்றி, தன்னந்தனியாக உழைத்து, தன் ஆராய்ச்சியை தொடங்கிய  5வதுவருடத்தில், Waring’s Problemsத்திற்குரிய வழியையும், அதன் விடைகளையும் காண்பதில், பெரு முன்னேற்றம் அடைந்தார்.

10-02-1936-ல் உலக கணித மேதைகள் வியப்பால் மூச்சு விட மறந்து போய் நின்ற நாள். இந்திய நாடு கணித உலக அரங்கில் தலை நிமிர்ந்து நின்ற நாள். டாக்டர் சிவசங்கரநாராயண பிள்ளை Waring’sProblemத்திற்கு விடை கண்டு பிடித்து, தாம் சீனிவாச ராமனுஜத்தின் வாரிசு தான் என்பதை, உறுதி செய்த நாள்.

மேலும் அவர் தான் கண்டுபிடிப்பை உறுதி செய்து, ஒரு நூலையும் வெளியிட்டார். இதை தொடர்ந்து,, Dr.pilai’s Theory of Numbers எனும் ஒரு கோட்பாடு கணிதவியலில் நிரந்தரமான ஓரிடத்தை  பெற்றது.

இம்மாபெரும் சாதனையை முடித்தவுடனேயே, கடந்த 400 ஆண்டுகளாக கணித மேதைகளை மிரட்டிக் கொண்டிருந்த, ” Fourier Series” எனும் மற்றுமொரு கடினமான புதிரை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, உயர்மட்ட அளவில் அப்புதிரை விடுவித்த பெருமை இவருக்கு உண்டு.

இதை தொடர்ந்து உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியராகிய டாக்டர் ஐன்ஸ்டீனும் (Einstein,) டாக்டர் ஓபன்ஹைமரும் (Oppenheimer) தங்களுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட, அவருக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் இவரோ, இந்தியாவை விட்டு வெளியேங்கும் செல்ல விரும்பவில்லை. எனவே அவர்களழைத்த போதும் ‘India is enough for my research’ என பணிவுடன் கூறி, உலகையே வியக்க வைத்தார்.

ஆனால் காலத்தின் கட்டாயத்தால் பின்னாளில் சான் பிரான்சிகோவில் நடைபெறவிருந்த உலக கணித மாநாட்டிற்கு தலைமை ஏற்கவும், அதன் பின் பிரிஸ்டன் பல்கலைகழகத்தில் டாக்டர் ஐன்ஸ்டீனுடன் சேர்ந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் டாக்டர் பிள்ளை அவர்கள் 1950 வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவிற்கு புறப்பட்டார்.

புறப்படுவதற்கு முன்பு தன் நண்பர்களிடம் ஒரு நோட்டு புத்தகத்தை உயர்த்தி காட்டி, இதில் அடங்கியுள்ள ஆராய்ச்சியினை நான் பிரிஸ்டனில் சென்று வெளியிடுவேன். இதன் மூலம் இந்தியாவுக்கு பெரும் புகழ் கிடைக்கும் என்றார். கவனியுங்கள், இதன் மூலம் தனக்கு பெரும் புகழ் கிடைக்கும் என அவர் கூறவில்லை. இந்தியாவிற்கு கிடைக்கும் என்று தான் கூறினார். பணியுமாம் என்றும் பெருமை என வள்ளுவர் எழுதியதே இவருக்காக தானோ.

‘Star of mary land’ எனும் விமானத்தில் எதிர்காலம் பற்றிய பெருங் கனவோடு அவர் புறப்பட்டார். விதி சிரித்தது. கெய்ரோவில் விமானம் இறங்கியது. எரிபொருள் நிரப்பிய பின்னர், மீண்டும் புறப்பட்டது. ஆகஸ்ட் 31ம் தேதி அதிகாலை 3 மணி, விமானம் சகாரா பாலைவனத்தின் மீது பறந்து கொண்டிருந்த போது எதிர்பாரவிதமாக விபத்துகள்ளாகி, எரிந்து விழுந்து சாம்பலானது.

அந்த விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பு தான், டாக்டர் பிள்ளையவர்கள் ராமானுஜம் இன்ஸ்டிட்டியூலும், சில ஆய்வு சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருந்தார். டாக்டர் பிள்ளை புறப்படவிருந்த முதல் பயணத்தை, சில காரியங்களை முன்னிட்டு அவரே ரத்து செய்தார்.

இரண்டாவது பயணத்தை, விமான கம்பெனி ரத்து செய்தது. மூன்றாவதுபயணம் – அதன் முடிவு இவ்வாறாகியது. சான் பிரான்ஸ்கோ மாநாட்டில் பங்கு கொண்ட கணித மேதைகள், டாக்டர் பிள்ளைக்கு புகழாரம் சூட்டி அஞ்சலி செலுத்தினர். டாக்டர் பிள்ளையின் உருவ படத்தை திறந்து வைத்து திருப்திப் பட்டனர்.

இடிபெல் எனும் கணித மேதை, உலகிலுள்ள சிறந்த கணித மேதைகளை பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார். “Men and Mathematics” என்பது, அந்த நூலின் பெயர். இதில் இந்தியாவை பற்றி எழுதும் போது, சீனிவாச ராமானுஜம், டாக்டர் எஸ்எஸ் பிள்ளை என இவ்விருவரை பற்றி மட்டுமே எழுதியுள்ளார்.

10ம் வகுப்பு கணித நூலில் தேர்வுக்காக, அன்று என்னும் தலைப்பில் இந்தியா சந்தித்த மிகச் சிறந்த கணித மேதைகளின் பரம்பரையை பற்றி கூறுமிடத்தில் ஆரியபட்டர், பிரம்மகுப்தர், பாஸ்கர், சீனிவாச ராமானுஜம், டாக்டர் எஸ்.எஸ்.பிள்ளை என எழுதப் பட்டுள்ளது.

டாக்டர் எஸ்.எஸ்.பிள்ளை உலக புகழ் பெற்ற ஒரு கணித மேதை மட்டுமல்ல, மனித குலத்தை ஒட்டு மொத்தமாக நேசித்த மனித நேயம் மிக்க பண்பாளரும் கூட.


Share it if you like it