வாரிசின் வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு

வாரிசின் வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு

Share it if you like it

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் போட்டி யிட்டார். அவர் தற்பொழுது உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

அவ்வழக்கில், உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவில், தன் மீதான குற்ற வழக்குகள் பற்றிய தவறான தகவல்களை கூறியுள்ளதாகவும், எனவே அவரது வேட்புமனுவை ஏற்றுக் கொண்டதை செல்லாது எனவும் தொகுதியில் தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என அறிவிக்க வேண்டும் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு ஒரு சில வாரங்கில் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share it if you like it