சென்னையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மக்கள் கடும் அவதியுறும் நிலையில் சன் நியூஸ் வெளியிட்டு இருக்கும் செய்தி மக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக சீர்கேட்டின் காரணமாக மழை வெள்ளத்தில் தமிழக மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வரும் வேளையில், ஒன் இந்தியா, கலைஞர் டிவி, சன் நியூஸ், நியூஸ் 7, தி.மு.க-வின் ஆதரவு பெற்ற முன்களப்பணியாளர்கள், நெறியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என, விடியல் ஆட்சியில் மக்கள் படும் துயரத்தை பற்றி செய்திகளை வெளியிடாமல், மீன் பிடித்து மகிழ்ச்சி, கொடைக்கானலில் இருப்பது போன்று மக்கள் உணர்வதாக கருத்து என எதற்கும் பயன்படாத வகையில், செய்திகளை வெளியிடும் இது போன்ற ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.