பாரதம் முழுவதும் இதுவரை 90 கோடி தடுப்பூசி மற்றும் 6 மாநிலங்களில் 100% முதல் டோஸ் போட்டு முடிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் பாரதப் பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் படி செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற பல தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியினால் இது தற்பொழுது சாத்தியமாகியுள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இச்சூழ்நிலையில் வாங்கம்மா வாங்கம்மா கொரோனா ஊசி பாட்டு பாடி, நடனம் ஆடி, செவிலியர்களுடன் இணைந்து பெண்மணி ஒருவர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள காணொளி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.